திரு. வல்லிபுரம் கருணாநிதி

வல்லிபுரம் கருணாநிதி

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1939 - மறைவு: 11 ஏப்ரல் 2024

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கணேசபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கருணாநிதி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இரவு 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - நாகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

தங்கராணி அவர்களின் அன்புக்கணவரும்,

கிருஷ்ணபாலன், விஜயகௌரி, சுரேஸ்குமார், கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தவமணிதேவி, ஞானலீலா, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற முருகேசு, பாலசிங்கம், இராசதுரை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயந்தி, காலஞ்சென்ற சந்திரமோகன், சோபா, அன்ரனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தர்மீகன், செந்தனேஸ் - அஷ்வினி, செங்கரன், சங்கவின், அபினயா, ஆதீசன், பவிதிகா, காலஞ்சென்ற கிருஷாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று அவரது இல-44/1, கணேசபுரம், கிளிநொச்சி இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழ் உடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2024 00:00)