திரு. வல்லிபுரம் கிருஷ்னேஸ்வரன்

(முன்னாள் உள்ளூராட்சி திணைக்களம்-கொழும்பு, விவசாயத்திணைக்களம் -யாழ்ப்பாணம்)

வல்லிபுரம் கிருஷ்னேஸ்வரன்

தோற்றம்: 24 நவம்பர் 1942 - மறைவு: 26 அக்டோபர் 2024

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கிருஷ்னேஸ்வரன் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென் வல்லிபுரம்-ராசபூபதி தம்பதியினரின் மூத்த புதல்வனும்,

வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற யாதவராயர்-இலக்குமியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாட்சி (முன்னாள் உத்தியோகத்தர்-யாழ் கச்சேரி, பிரதேச செயலகம்-தெல்லிப்பளை) அவர்களின் பாசமிகு அன்புக்கணவரும்,

இராசவல்லி, இராஜேஸ்வரி, சாரதா ஆகியோரின் அன்பு சகோதரனும்,

முகுந்தன் (வைத்திய கலாநிதி-அவுஸ்திரேலியா), யசோதா (வைத்தியர்-கொழும்பு போதனா வைத்தியசாலை-களுபோவில) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஷாணி (CIMA, MBA), தியாபரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மாதேஷ், மாதங்கி ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், இரகுநாதன் மற்றும் இராமநாதன், பாலகிருஷ்ணன் (பிரான்ஸ்), சாரதாதேவி, கலாதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 28-10-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2024 04:00)