Mrs. Vallipuram Latchumippillai
Deceased: 26 May 2026
யாழ். சோதி வைரவர் கோவில், இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வல்லிபுரம் இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி (அப்பு), குகமலர், காலஞ்சென்ற விவேகானந்தன் (ஆனந்தி), யோகேஸ்வரன், சிவமலர், வசந்தமலர், கண்ணதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இடைக்காடர் ஈசுவரன், சிவமலர், பாலகுமார், பொன்னீஸ்வரன், காவேரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரணிகா, விஜய், துளசிகா, லக்சிகா, சாருஜன், சாருஜா, திவ்வியா, ராகுல், கிருசன், கம்சா, நிஜன், நிசா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
அம்மணி, தண்ணிலா, காந்தள், இளவல், வாகை, இயல், ஆதன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
