டாக்டர். வரதராஜா சிறிகாந்தன்
தோற்றம்: 01 ஆகஸ்ட் 1942 - மறைவு: 10 ஜனவரி 2022
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, இங்கிலாந்து Manchester ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr வரதராஜா சிறிகாந்தன் அவர்கள் 10-01-2022 திங்கட்கிழமை அன்று Manchester யில் இயற்கை எய்தினார்.
காலஞ்சென்றவர்களான Dr. வரதராஜா விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சுருவில் சிற்றம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகனும்,
அன்னார், மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, சரோஜினி, சிறீதரன், சத்தியபாமா, சிறீரங்கன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சொர்னபாலா மற்றும் வத்சலா, காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, Dr. இராசலிங்கம் மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்ற ஆனந்தலட்சுமி மற்றும் சந்திரமதி, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா மற்றும் அருள்கந்தராஜன், நவநீதராஜன் ஆகியோரின் மைத்துனரும்,
Dr. கோகிலா அவர்களின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
