Mr Varatharajan Sellathurai (Varathan)
Date of Birth: 15 December 1958 - Deceased: 25 January 2024
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Düsseldorf ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வரதராஜன் செல்லத்துரை அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை - வள்ளியம்மை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் - பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகன், சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி (கோமதி), வசந்தா மற்றும் வனிதா, முருகானந்தன் (ராசன்), கலாநிதி (கலா), தயாநிதி (தயா), ஆனந்தராசா (நந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலநாதன், சிவசுப்பிரமணியம், லோகநாதன், இந்துமதி, லோகப்பிரகாஷ், அருளானந்தன், அமிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தயானந்தன், அருளாநந்தன், காலஞ்சென்ற சிவகுமாரி, ஜெயகுமாரி, காலஞ்சென்ற அகிலகுமாரி, சுகந்தகுமாரி, சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
