Mr. Veerasingam Sadatchcharam
Deceased: 04 August 2024
இல- 48/ 5, 1ஆம் ஒழுங்கை, கிடாய் விழுந்தான் பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல- 149/16 மோதரை வீதி, கொழும்பு-15ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரசிங்கம் சடாச்சரம் அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம்- நவரட்ணமணி தம்பதியினரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற அரியரட்ணம்-நாகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சிவகாந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷாருஜன், ஷாருலேகா, விஷ்ணிலேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகலோகதேவி, கமலநாதன் மற்றும் ராஜேஸ்வரி, பத்மசோதி, இராசலிங்கம், சண்முகலிங்கம், சதாநந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்திரகாந்தா, காலஞ்சென்ற ஜெயகாந்தா, தேவகாந்தன், லக்ஷிகாந்தா, காலஞ்சென்ற சிவகுருநாதன், அம்பிகாமலர், பிரபுசிகாமணி, விஜயலக்ஷிமி, ஜீவராணி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கலைவாணன் அவர்களின் அன்புச் சகலனும்,
சருமா அவர்களின் உடன் பிறவா சகோதரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 07-08-2024 புதன்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-08-2024 வியாழக்கிழமை கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
