திரு. வௌ்ளையர் சிவசரணம்
(ஆவரங்கால் சர்வோதய சனசமூக நிலையம் - பொருளாளர், நிர்வாக உறுப்பினர்)
மறைவு: 26 டிசம்பர் 2023
யாழ். ஆவரங்கால் மேற்கு சர்வோதய வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வௌ்ளையர் சிவசரணம் அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வௌ்ளையர்-சின்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற க. மாணிக்கம், சி.வள்ளி, காலஞ்சென்ற வெ. கந்தசாமி, த.பூமணி, வெ. பவளம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சி. கயல்விழி, த. பூங்குன்றன் (கபூர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
