திரு வேலுப்பிள்ளை மகேசவேலு
(இந்துக்கல்லூரி அதிபர்,கோட்டக்கல்வி அதிகாரி- பிரதிக் கல்விப்பணிப்பாளர்)
தோற்றம்: 28 பெப்ரவரி 1933 - மறைவு: 16 ஆகஸ்ட் 2019
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, மானிப்பாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மகேசவேலு அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீமுருகவசந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கலைரஞ்சன்(பிரித்தானியா), முகுந்தன்(கனடா), தர்ஷினி(பிரித்தானியா), ஹேமலதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சிதமலர்(பிரித்தானியா), பிரபாஜினி(கனடா), அகிலன்(பிரித்தானியா), சசிதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவிக்னா, அஷ்வின், கீர்த்திகா, ஹரிப்பிரியா, அக்ஷினி, அபினன், விஷாகன் மற்றும் அபினவ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
www.tamilthakaval.org
