Mr. Velmurugu Kangasabapathy
(Retired Technical Officer)
Date of Birth: 19 January 1939 - Deceased: 30 April 2024
யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேல்முருகு கனகசபாபதி அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிராமகோட்டு நீதிபதி சங்கரப்பிள்ளை வேல்முருகு - சீதாதேவி தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நுளம்பியல் நிபுணர் இராமசாமி மகாதேவா - பாலாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,
திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
நரேந்திரன் (பொறியியலாளர்-லண்டன்), கௌரி (கனடா), தர்ஷினி (சட்டத்தரணி - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோஜினி (வைத்தியர்-லண்டன்), சிவகுமார் (கனடா), ஸ்ரீகணேசராஜா (சட்டத்தரணி-கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்,
அபி (லண்டன்), செயூரன் (கனடா), சேயோன் (கனடா), செந்தாழன் (கனடா), சாருகேஷன் (கொழும்பு), சாம்பவி (கொழும்பு) ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம், மனோன்மணி, இந்திரா ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற பகவதி மற்றும் விஜியறாணி (சட்டத்தரணி - பதில் நீதவான்), கலைமதி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோரியடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
