திரு. வேலும் மயிலும் குருபரன்

(வர்த்தகர், சூர்யா மருந்தக உரிமையாளர்)

வேலும் மயிலும் குருபரன்

தோற்றம்: 28 செப்டம்பர் 1963 - மறைவு: 03 ஜூன் 2026

யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், இல- 157, 4ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலும் மயிலும் குருபரன் அவர்கள் 03-06-2026 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலும் மயிலும் - இரத்தினசிகாமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜேசுதாசன் - எலிசபேத் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

மொறீன் சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சலோமி சரணியா, தேனுகானன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷாந்த் (DFCC வங்கி முகாமையாளர்), சஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷ்ருத்தின் பாசமிகு பேரனும்,

முகுந்தன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), சசிகலா (அவுஸ்திரேலியா), நளினிகலா (கொழும்பு) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-06-2026 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 02.00 மணியளவில் நிலாவரை, நவக்கிரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 76 642 2308

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2026 00:00)