Mr. Velupillai Kandiah

Velupillai Kandiah

Date of Birth: 20 February 1952 - Deceased: 15 June 2025

யாழ். காரைநகர் கோவளம் நட்டுப்பாளியை பிறப்பிடமாகவும், வேம்படியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுபிள்ளை கந்தையா அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவகாலா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவரஞ்சினி (ஹொலண்ட்), விக்கினேஸ்வரன் (இலங்கை), திவாகரன் (கனடா), சசிகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

சுந்தரசிவம் (ஹொலண்ட்), நிரஞ்சனரூபி (இலங்கை), மஞ்சு (கனடா), தனரஞ்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஏகநாயகி, ஈஸ்வரி துரைராசா, குணரட்ணம் மற்றும் தங்கரட்ணம், ராஜேஸ்வரி  ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுஜீவன், ஆரதனா, மிதுஷா, திபிஷா, யஷ்விதா, சாதனா, டிலக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-06-2025 வியாழக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரது வேம்படி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை  இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2025 04:00)