திரு. வேலுப்பிள்ளை நவரட்ணம்

(ஓய்வுபெற்ற கச்சேரி உத்தியோகத்தர், நியாப், ரெட்பானா (Red Barnet) உத்தியோகத்தர்)

வேலுப்பிள்ளை நவரட்ணம்

தோற்றம்: 28 ஜூன் 1938 - மறைவு: 18 மார்ச் 2023

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடாகவும், தாவடியை வசிப்பிடமாகவும், தற்போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நவரட்ணம் அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தா (ஆசிரியை - புதுக்குடியிருப்பு), லலிதா (டென்மார்க்), கண்ணன் (கனடா), லதா (புதுக்குடியிருப்பு), கல்யாணி (பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறேம்குமார் (ரகு), சண்முகநாதன் (சண்), பிரபா, தயாபரன் (தயா- ஆசிரியர்), ஜெய்சங்கர் (ஜெயா - பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிது, மனோசந்த், பிரனா, சதுனா, சுரேன்ந், சபீசன், சங்கீத், யருணன், நேர்த்திகா, பிரனாளி, கலோயன், வேனுயன், பேபிகா, கரிணி, பிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற மீனாட்சி, சின்னத்தங்கம், தேவி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
 
காலஞ்சென்ற குமாரசாமி, சுந்தரலிங்கம், பொன்னுத்துரை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று புதுக்குடியிருப்பில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2023 03:15)