Mr. Veluppillai Thanabalasingam

(ஓய்வுநிலை அதிபர்)

Veluppillai Thanabalasingam

Date of Birth: 19 March 1933 - Deceased: 06 August 2024

யாழ். கொல்லங்கலட்டி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

கிரிதரன் (தேசிய சேமிப்பு வங்கி-சுன்னாகம்), சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், வன்னியசிங்கம், நாகராசா, இராஜேஸ்வரி, தங்கரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், மாணிக்கவாசகர், பரமேஸ்வரி, யோகநாதர், சண்முகநாதன் ஆகியோரின்தும் அன்பு மைத்துனரும்,

சித்திரா (ஆசிரியர்-யா/இணுவில் மத்திய கல்லூரி), காலஞ்சென்ற அனுரதி (பிரதேச சபை-கரவெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுசன், அபினா, கிருசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுன்னாகம் கொத்தியாலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 04:00)