திருமதி. விக்கினராசா தவராணி
தோற்றம்: 11 ஜூலை 1956 - மறைவு: 12 நவம்பர் 2025
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல- 852/9, பருத்தித்துறை வீதி, நல்லூர் மற்றும் வீரபத்திரர் வீதி, கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினராசா தவராணி அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் - சின்னம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விக்கினராசா அவர்களின அன்பு மனைவியும்,
தவராசா, தவசீலன், காலஞ்சென்ற தவேந்திரன், தவச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாஹினி, தர்சினி, சுதர்சினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
பிரபாகரன், கிருசாந்தன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜனிகா, அக்ஷரா, அபிஷாயினி, ஆருஜன், ஆதிரன், ரதுமிக்கா, தனுஸ்ரீ, பிரித்திகாஸ்ரீ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருநெல்வேலி பிராமண உயரப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
