திருமதி. விஜயலெட்சுமி ராஜீ நாயுடு
தோற்றம்: 13 டிசம்பர் 1956 - மறைவு: 10 ஏப்ரல் 2025
பதுளையைப் பிறப்பிடமாகவும், ஹட்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலெட்சுமி ராஜீ நாயுடு அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - ஆராயி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைசாமி - பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ராஜீ நாயுடு (ஹட்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சகிலா (கனடா), பிரவின் (The Meridien Steel, Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஶ்ரீகாந்த் (கனடா), சரண்யான (OKI International, Wattala) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சித்ஶ்ரீ, ஶ்ரீயா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு அவ்வாவும்,
ஜெயராம், காலஞ்சென்ற செல்வராஜ், தனலெட்சுமி, ஆறுமுகம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-04-2025 வௌ்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
