திரு. விஜயரெட்ணம் பிரேமகாந் (பிரேம்)
(உரிமையாளர் - ஹிமா கட்டிடப் பொருட்கள் வழங்கல்)
தோற்றம்: 31 மே 1980 - மறைவு: 01 மே 2026
திருகோணமலை - பாலையூற்றைப் பிறப்பிடமாகவும், கன்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயரெட்ணம் பிரேமகாந் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், விஜயரெட்ணம் - காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மகனும், பத்மசேகர் - காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சிவப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
தாணசரன், ஹிமாத்ரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி, காலஞ்சென்ற புஸ்பராஜன், தினேஷ், றிஸ்வான், றிஸானா, அனோஜா, வினோ, செல்லரூபினி, சாள்ஸ் ஆகியோரின் சகோரரும்,
காலஞ்சென்ற ரஞ்சித், வசந்தராணி, செல்வராஜன், கலா, புனிதா, காலஞ்சென்ற செல்வரஞ்சன் ஆகியோரின் பெறாமகனும்,
சக்திப்பிரியா, பிரணவப்பிரியன், குகப்பிரியன், செல்வரஞ்சன், ரொசான், டசிக்கா ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில நடைபெற்று, திருவுடல் அன்புவழிபுரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
