திருமதி. விமலாதேவி பரமேஸ்வரன்

விமலாதேவி பரமேஸ்வரன்

தோற்றம்: 26 செப்டம்பர் 1958 - மறைவு: 28 நவம்பர் 2021

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயல் 1ஆம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும், புத்தூர் கிழக்கு மட்டுவில் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் விமலாதேவி அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற பசுபதி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மல்லிகாதேவி, சறோசாதேவி, பத்மநாதன், சிவபாதம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருகரன் (டென்மார்க்), கஜன் (பனை ஆராய்ச்சி நிலையம்- கைதடி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரித்தா (டென்மார்க்), தாக்‌ஷாயணி ஆகியோரின் அன்பு மாமியும்,

ஹர்ஷ்வின், ரோஹினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் புத்தூர் கிழக்கு மட்டுவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
எமது   கண்ணீர் அஞ்சலிஅன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து , எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 
தகவல்:- குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2021 16:46)