திருமதி. விமலாம்பிகை இராசலிங்கம்
தோற்றம்: 09 ஜூன் 1945 - மறைவு: 29 செப்டம்பர் 2022
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாளிகாவத்தை மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாம்பிகை இராசலிங்கம் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச் சேர்ந்த செல்லையா ராசாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற காயத்திரி, கலைவாணி, சோபனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லிங்கேஸ்வரன், சபேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனு, நிலா, அர்ஜுன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, நடராஜா, பாலச்சந்திரன் மற்றும் சாரதாம்பிகை, திருவாதரன், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, ரஜனி மற்றும் மல்லிகாதேவி, ஜெயரத்னராஜா, தங்கராணி, ஞானசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
