செல்வி. விசாகரத்தினம் சின்னத்துரை
(ஓய்வுநிலை உதவி திட்டமிடல் பணிப்பாளர்)
தோற்றம்: 18 அக்டோபர் 1944 - மறைவு: 26 ஜூன் 2022
யாழ். வடமராட்சி ஊரிக்காடு நாவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாகரத்தினம் சின்னத்துரை அவர்கள் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, கமலாதேவி மற்றும் உத்தரராசா, காலஞ்சென்ற மல்லிகாதேவி, தியாகராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரராஜா, கணேசராஜா, காலஞ்சென்ற புவனேஸ்வரன், அழகேஸ்வரராஜா, விக்னேஸ்வரன், யசோதா, காலஞ்சென்ற நேசராஜா, அருச்சுனராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ரகுகுமார், ரமேஸ்குமார், தர்ஷிகா, நிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 11.00 மணியளவில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
