திரு. விஸ்வலிங்கம் இளங்கோ (கோபு அத்தான்)
தோற்றம்: 28 செப்டம்பர் 1965 - மறைவு: 06 ஜனவரி 2023
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும், வவுனியா 2ம் ஒழுங்கை கோவிற்புதுக்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் இளங்கோ அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்வமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்
காலஞ்சென்ற செல்வராசா, இரத்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கலா அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷிதரன் (கொமர்சியல் வங்கி, முள்ளியவளை), டிலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வதனா (நிர்மலா- சுவிஸ்), கோணேஸ்வரன் (பிரான்ஸ்), கவிதா (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரராஜா (சுவிஸ்), கமலினி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுதாகரன் (கண்ணன் கூல்பார் உரிமையாளர்), ஜெயக்குமார், சேகர், நந்தினி (வவுனியா), நந்தகுமார் (கனடா), ரஞ்சித்குமார் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வித்தியா, கர்ஷன், அபிரா (சுவிஸ்), சஞ்சீவன், சலோஜன், விதுஷா(கொழும்பு) ஆகியோரின் தாய்மாமனும்,
டெனதா, டினகன், டிஷாந்தினி, டினோஜன் ஆகியோரின் பெரியப்பாவும்,
உதயசங்கர் (ஐக்கிய அமெரிக்கா), உதயராஜ் (கனடா), உஷாந்தினி (வவுனியா), லக்ஷன் (கொழும்பு), டினோ (ஐடியல் பினான்ஸ் வவுனியா), சோபிதா (சுவிஸ்), விபுஷனா, விஸ்ணுகா (வவுனியா), ஷபர்னா, தியா, அஜய், ஆதித், ஆரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சித் அவர்களின் சித்தப்பாவும், சனா, யாரா ஆகியோரின் அப்பப்பாவும்,
தியாகராஜா, கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 11:00 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
