திரு. விஸ்வர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (V. K. சுப்பிரமணியம்)

(ஓய்வுபெற்ற அதிபர் கரணவாய் மத்திய மகா வித்தியாலயம்)

விஸ்வர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (V. K. சுப்பிரமணியம்)

தோற்றம்: 04 மே 1931 - மறைவு: 28 ஜூலை 2022

யாழ். புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவிண்டில், கொழும்பு, பிரித்தானியா Romford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஷ்பேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, மோகன், விஜிதா, றெஜிதா, கணேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிரிதரன், சாந்தி, ஞானகுமாரன், கஜேந்திரன், துஸ்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனனி, கீரா, அஷ்வின், தக்‌ஷினி, சுதர்சன், வர்ஷினி, மயூரன், அஷ்வத், வைஷ்ணவ், அபினவ் ஆகியோரின் அருமைப் பேரனும்,

கிரிஷான், அமரா, ஷைலா, றியா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், கந்தசாமி, கணேசலிங்கம் மற்றும் ஜெயபாலசிங்கம் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, வித்துவசிங்கம், ஜெயசிங்கம், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2022 02:06)