திரு. விசுவலிங்கம் நடராஜா
மறைவு: 07 அக்டோபர் 2025
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 448, 31ம் வாய்க்கால், பிரமந்தனாறு விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் நடராஜா அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பத்தினிப்பிள்ளை தம்பதியுனரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, தம்பிஐயா, வைத்தியநாதர் முத்துக்குமாரு, சரஸ்வதி (கிளி) மற்றும் கணபதிப்பிள்ளை (அபிராமி அரைக்கும் ஆலை உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, லதா (பிரான்ஸ்), சுதா, வசந்தரூபன் (ஆசிரியர்- தனியார் கல்வி நிலையம்), காலஞ்சென்ற ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரன், சிவகுமார் (பிரான்ஸ்), அரவிந்தன் (நிர்வாக அலுவலகர்- மக்லி யோட் வைத்தியசாலை, இணுவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியன், அஜந்தன், சயந்தன், கெபின் (பிரான்ஸ்), சகானா ஆகியோரின் அன்பு பேரனாரும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், கிருஷ்ணபிள்ளை, அம்பிகாவதி மற்றும் பூரணம், தனலட்சுமி, யோகம்மா (தேவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிரமந்தனாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
