திருமதி. விவேகனந்தமூர்த்தி இராஜேஸ்வரி (பிள்ளை)
மறைவு: 08 டிசம்பர் 2025
யாழ். இணுவில் மேற்கு வட்டுவினிப் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் வட்டுவினி ஓழுங்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விவேகானந்தமூர்த்தி இராஜேஸ்வரி அவர்கள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன் (கணேசு) - லீலாவதி (மணி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை - இராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,
விவேகானந்தமூர்த்தி (ஆனந்தன்) அவர்களின் அன்பு மனைவியும் ,
இணுவில் மத்திய கல்லூரி மாணவிகளான அபிஷா, ஜீவிதா, கோபிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், தவகேஸ்வரன், விக்கினேஸ்வரன் (விக்கினா - கனடா), சோதீஸ்வரன் (சோதி - கனடா), ஜங்கரன், பிரியா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பிரபாவதி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, சிவறஞ்சினி (சிவா - கனடா), தவபாரதி, கஜனா, சாந்தா, சந்திரா, காலஞ்சென்றவர்களான மனோகரன், ஶ்ரீ ஆகியோரின் மைத்துனியும்,
கயூரன், டிலக்சனா, திபிஷா, விதுசானா, பானுஜன், விதுலா, மதுஷன், சசிவதனா, தனுஷசன், தருமிலன், பவிசாலினி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
தவக்குமார், அனுஷா, செந்தில்குமார், வனஜா, பாலரூபன், லோகாஜினி, கமலராணி, சத்தியவதி, விஜிதர்சினி, ஜனனி, திருமுருகன் தெய்வீகன், குணாளினி, வாவுச்சி, லட்சுமி ஆகியோரின் உடன்பிறவாத சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
