திரு. வீரபாகு முத்துகுமார்

வீரபாகு முத்துகுமார்

தோற்றம்: 08 மார்ச் 1963 - மறைவு: 02 ஏப்ரல் 2024

கொழும்பு முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீ. முத்துகுமார் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவ பிராப்த்தி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரபாகு - சிவமணி தம்பதியினரின் மூத்த மகனும், 

திருமதி. கௌரீஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

காயத்ரி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவீன் குமாரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை சுப்ரீம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 04-04-2024 வியாழக்கிழமை தொடக்கம் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வைக்கப்பட்டு, 06-04-2024 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2024 00:00)