திருமதி. யோகநாதன் ஞானேஸ்வரி (மலர்)

யோகநாதன் ஞானேஸ்வரி (மலர்)

தோற்றம்: 06 அக்டோபர் 1963 - மறைவு: 03 ஏப்ரல் 2024

யாழ். வேலணை கிழக்கு, பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி யோகநாதன் ஞானேஸ்வரி அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (காந்தி) - அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சரோசினிதேவி (கனடா) அவர்களின் பெறாமகளும்,

தர்மிளா (பிரான்ஸ்), ஜெயமலா (பிரான்ஸ்), சஞ்சீவன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமல்ராசன் (கமல் - பிரான்ஸ்), ஆதிபன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

கிரிஸ், சாருஸ், இஷா,அஜீஸ், அஸ்வித், ஜெனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 06-04-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரையும், 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரையும் Crématorium Joncherolles - 95, rue Marcel Sembat 93430 Villetaneuseல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-04-2024 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 2.30 மணியளவி ல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2024 00:00)