யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி பாரதி வீதி, பிரான்ஸ் பாரிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி கருணைநாதன் அவர்கள் 14-12-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி-சௌபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாரட்ணம் கருணைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, மணிவண்ணன், கயல்விழி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாயகம், கலைமதி, உதயசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பஞ்சரட்ணம் மற்றும் நேசராணி (இலங்கை), சறோஜினி (கனடா), காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பங்கஜராணி, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, குகதாசன், மற்றும் இந்திராணி (கனடா), காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், பத்மநாதன், மங்கையற்கரசி, யோகரட்ணம் மற்றும் சதானந்தபோதம் (லண்டன்), சிவநாதன் (பிரான்ஸ்), சிவநிதி (ஐக்கிய அமெரிக்கா), சிவமலர் (ஜேர்மனி), கருணாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைதேகி-தினேஷ், சிந்துஜன்-பிரீத்தி, சஞ்சயன், அபினேஸ், அபிநயா, சிறீஜன், பஸ்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனாயா, மைலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
www.tamilthakaval.org

