திருமதி யோகவதி இரத்தினம்
தோற்றம்: 24 ஏப்ரல் 1935 - மறைவு: 17 டிசம்பர் 2023
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை இரத்தினகார பிளேஸ், பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகவதி இரத்தினம் அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் இராசலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் இரத்தினம் (ஓய்வுபெற்ற சுங்க இலாகா அதிகாரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவானி, காலஞ்சென்ற மகேஸ்வரன், சாந்தினி, நடேஸ்வரன், ராஜ்குமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
பத்மநாதன், மேனகா, நந்தகுமார், பவானி, ஒனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மலர்தேவி, புஷ்பராணி, பாக்கியசோதி, ரங்கநாதன், மனோகரன், காலஞ்சென்றவர்களான நேசம்மா, வேலாயுதம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுரா-நிஷாந்தன், குமரன்-துளசி, சஞ்ஜீவன்-ரிஷங்கா, அருண், தீபா, பிரதீப், அஞ்சலி, சோபியா, ரயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சௌமியா, சினேகா, சகானா, காயத்திரி, ரம்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
www.tamilthakaval.org
