திரு. யோகேஸ்வரன் பிரஷன்னா

யோகேஸ்வரன் பிரஷன்னா

தோற்றம்: 08 பெப்ரவரி 1996 - மறைவு: 08 ஏப்ரல் 2026

திருகோணமலை - மூதூர் பாலத்தடிச்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகேஸ்வரன் பிரஷன்னா அவர்கள் 08-04_2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், யோகேஸ்வரன் - வசந்தமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கிருத்திகா, லக்ஷ்மன், மஹிஷா, ஹரிசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானமூர்த்தி - செல்லத்தங்கம் தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா - நேசமணி தம்பதியினரின் செல்லப்பேரனும், 

சிறீதரன், முரளிதரன், ஜெயந்தி, ஜீவதி, சுமதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுகந்தமலர், திலகேஸ்வரன், இராஜேஸ்வரன், கேதீஸ்வரன், பிரதாபன், பிரதீபன் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-04-2026 புதன்கிழமை மாலை 4.30 மணி வரை திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பாலத்தடிச்சேனையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் பாலத்தடிச்சேனை இந்து மாயனத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2026 00:00)