யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதி ஆவரங்காலை வசிப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி காசி நவரட்ணம் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா (சாரதி - பலநோக்கு கூட்டுறவு சங்கம், நீர்வேலி) - பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான காசிதம்பி - நாகமுத்து அவர்களின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற நவரட்ணம் (சிரேஷ்ட ஊடகவியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதர்ஷினி (கனடா), அம்பிகை (அவுஸ்திரேலியா), காசிராஜன், காசிரூபன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகதாஸ், தர்மலிங்கம், தர்சிகா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரி, காலஞ்சென்ற கிரன், மற்றும். நிலா, சந்தோஷ், சஹானா, சஞ்ஜே, டிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற புவனேந்திரன், சுப்ரமணியம், ஜெகதாம்பாள், நித்தியானந்தன், கமலேஷ்வரி, குலம் (பொருளாளர், ஆவரங்கால் ஒன்றியம், UK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாசரம், சாந்தலிங்கம், ராமநாதன், பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 494, டி சொய்சாபுர றோட் மொரட்டுவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் 07-01-2025 புதன்கிழமை காலை முதல் 08-01-2025 வியாழக்கிழமை மாலை வரை பார்வைக்கு வைக்கபட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
*********
Remains lie at home from Wednesday morning to Thursday evening at 494 De Soysa Road, Moratuwa Cortege leaves home at 4:00 pm on Thursday for cremation at Mt-laviniya Cemetery.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

