31 ஆம் நாள் நினைவஞ்சலி
திரு இ வே கனகசபாபதி
(ஓய்வுநிலை பதவிநிலை உத்தியோகத்தர் கமநலசேவைகள் திணைக்களம் வவுனியா)
தோற்றம்: 07 பெப்ரவரி 1944 - மறைவு: 15 மார்ச் 2020
யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும்
கொண்டிருந்த இ.வே கனகசபாபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தமாய் அமைந்தவர்
ஆழமான அறிவுரைகள் எமக்களித்து
அவனியில் வாழ வழிகாட்டியவர்
தன் கடமைகளை எப்போதும்
கண்ணியமாய் நிறைவு செய்தவர்
தீர்வுகாண இடர்ப்பட்ட நேரங்களில்
எமக்கு துணை நின்று தீர்ப்பளித்தவர்
இவ்வுலகில் நாம் நல்வாழ்வு வாழ
எம்மை எப்போதும் நெறிப்படுத்தியவர்
அப்பா,
என்றென்றும் உங்கள் நினைவுகள்
எம்முடன் கலந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்..
www.tamilthakaval.org
