3 ஆவது ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கப்ரியல் பிள்ளை மரியதாசன்
தோற்றம்: 20 பெப்ரவரி 1943 - மறைவு: 19 ஜூலை 2019
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கப்ரியல் பிள்ளை மரியதாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று
மறைந்து விட்டதோ!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எங்களை நிர்க்கதியாய்
பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் அப்பா...
காலங்கள் ஆயிரம் போனாலும்
மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
உறவென்று அழைக்க
நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்
எங்கள் உயிர் உள்ளவரை
எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
