one year Remembrance
Late Kandiah Thirunavukkarasu
(Retired Principal)
Date of Birth: 05 September 1950 - Deceased: 20 June 2021
யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் அமரர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு
வாழ்ந்து- எங்களை வாழ
வைத்த தெய்வமே உங்கள்
ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள்
யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பாரினிலே நேசத்துடன் எங்களை
ஆளாக்கி நேர்மையுடன்
வாழ்ந்தீர்களே அப்பா !
எங்களுடைய வெற்றிகளுக்குப்
பின்னால் நீங்கள் இருந்தீர்கள்
தோல்விகளுக்குப் பின்னால்
தோள் கொடுத்தீர்கள்
மறக்க முடியவில்லை அப்பா !
வருடங்கள் எத்தனை
சென்றாலும் எம் நெஞ்சை
விட்டு அகலாது உங்கள்
நினைவுகள் அப்பா !
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் எமதருகில் இல்லையே
கண்மணி போல் எம்மைக்
காத்த அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
