1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் லலிதா ஞானலிங்கம்

லலிதா ஞானலிங்கம்

தோற்றம்: 25 பெப்ரவரி 1958 - மறைவு: 13 ஏப்ரல் 2020

யாழ். அச்சுவேலி தம்பாளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த லலிதா ஞானலிங்கம்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈரைந்து மாதங்கள் எமை

சுமந்து மீட்டெடுத்தாய் பரிவோடு
பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த
எம் தாயே.! உங்களை இனி
எங்கே காண்போம் அம்மா..!
 
இல்லறமே நல்லறம் என
உரைத்து இரு கரம் பற்றி,
சீரும் சிறப்புமாய் மழலை
செல்வங்களோடு மண்ணுலகத்தில்,
மாண்புடன் வாழ வழிசமைத்து
வாழ்வாங்கு வாழவைத்தாயே.!
 
உன்னை இனி எங்கு
காண்போம், அம்மா அம்மா
என கதறுகிண்றோம் ஆயிரம்
உறவிருந்தாலும் அம்மாவின்
உறவுபோல் இனிவருமோ?
 
ஏங்குகின்றோம் ஏதினில் இனி
எமக்கு ஏற்றம் புரிய வைக்க
யார் வருவார்.! யார் வருவார்.!
உன் பிரிவால் வாடும்....  

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org