1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகாதேவி ஜெயமணி முருகையா
(இல்லத்தரிசி)
தோற்றம்: 20 டிசம்பர் 1939 - மறைவு: 20 ஏப்ரல் 2022
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சம்பியா, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாதேவி ஜெயமணி முருகையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும்
எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம்
நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா.. ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
