31ம் நாள் நினைவஞ்சலி
அமரர் மார்க்கண்டு சுப்பிரமணியம்
(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி உத்தியோகத்தர்)
தோற்றம்: 17 ஏப்ரல் 1929 - மறைவு: 17 ஆகஸ்ட் 2020
யாழ்ப்பாணம் கோப்பாய் அப்பிழனையை பிறப்பிடமாகவும், மட்டுவில்தெற்கை வதிவிடமாகவும், கனடா ரொறன்டோவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற மக்கள் வங்கி உத்தியோகத்தர், சாவகச்சேரி) அவர்களின் 31ம் நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளிவிளக்காய் திகழ்ந்த
எங்கள் அன்பான அப்பாவே!
ஒரு கூட்டுக் கிளிகளாக நாம் சந்தோஷமாக
சிறமடித்து பறந்தோம்
தீடீரென உங்களை அந்தக் காலனவன்
விதி வடிவில் வந்து கவர்ந்து சென்றுவிட்டான்
எத்தனை யுகங்கள் சென்றாலும் மறக்கமுடியுமா?
உமது வதனமதை!என்றும் உங்கள்
நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்த்க்கின்றோம்
அன்னாரின் பிரிவுத் துயர் பகிர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
தகவல்:- குடும்பத்தினர்
கனடா +1 416 632 1230
www.tamilthakaval.org
