5ம் ஆண்டு நினைவஞ்சலி
திரு நமசிவாயம் சச்சிதானந்தன்
மறைவு: 16 ஜூலை 2017
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரடிபோக்கு, கோனாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,
பிரான்ஸ் Strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் சச்சிதானந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஆண்டுகள் ஐந்து சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
நாட்களை தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்! நீங்கள்
எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம்
அளவில்லா அன்பை மலர் சாந்தியாக
செலுத்துகின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
