1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பத்தக்குட்டி கைலாசபிள்ளை

(இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை நீர்ப்பாசன இலாகா)

பத்தக்குட்டி கைலாசபிள்ளை

தோற்றம்: 08 மார்ச் 1924 - மறைவு: 09 செப்டம்பர் 2020

மட்டக்களப்பு மண்டூரை பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு பத்தக்குட்டி கைலாசபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.


அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்

பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாகவும்
இருந்த எங்கள் ஐயாவே!

நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.

இனி இன்பத்தில் இன் முகம் காட்டவும்
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இவ்வுலகில் நாம் வாழ்ந்திட இறைவனாய்
இருந்து எம்முடன் துணை நிற்க வேண்டுகிறோம்.


தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org