1ம் ஆண்டு நினைவஞ்சலி. நினைவஞ்சலி
அமரர் பொன்னையா நற்குணநாதன்
மறைவு: 28 டிசம்பர் 2021
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Maribo, Middelfart ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், Ikast ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நற்குணநாதன் அவர்களின் 1ம் ஆண்டு
நினைவஞ்சலி.
நீங்கள் இல்லாத நாம்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமப்பா!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம் !!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
