1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசாத்தியம்மா தில்லைநாதன்

இராசாத்தியம்மா தில்லைநாதன்

தோற்றம்: 10 மே 1946 - மறைவு: 18 ஜூலை 2021

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசாத்தியம்மா தில்லைநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 07-08-2022

ஆண்டுகள் ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம் அம்மா!
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
 ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அம்மா!

எங்களுக்கு வாழ
வழிகாட்டிய எங்கள் அம்மா
எம் தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டுப் போக உங்களுக்கு
 எப்படி மனம் வந்தது அம்மா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org