1st Year Remembrance
Mr Rasiah Sukumaran
(Retired Police Inspector)
Date of Birth: 04 October 1952 - Deceased: 04 April 2019
திதி: 23.03.2020
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், துன்னாலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா சுகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப் பூமியில் உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்..
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே!
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
