1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினசபாபதி விவேகானந்தன் (ரட்ணா)

(Retired Wing Commander)

இரத்தினசபாபதி விவேகானந்தன் (ரட்ணா)

தோற்றம்: 11 ஏப்ரல் 1932 - மறைவு: 11 நவம்பர் 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசபாபதி விவேகானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டுகள் ஆனால் என்ன

ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்!
 
ஓராண்டு ஆயினும்
ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து
தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்
 
ஆண்டவனே வந்தாலும்
அப்பா உம் ஆருயிர்
அன்புக்கு ஈடாகுமா?
மார்பில் சுமந்தாயே
எங்கள் அன்பு அப்பா!
உங்கள் பிரிவால் சுமை
கொள்கிறோம் ஏன் அப்பா!!
 
நீங்கள் இல்லாத இந்த உலகத்திலே
சுவாசிக்க கூட வலிக்கிறதே!  
 
 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org