31ம் நாள் நன்றி நவிலல் நினைவஞ்சலி
அமரா் ரேணுகாதேவி சரவணசிவா (பபா)
தோற்றம்: 20 செப்டம்பர் 1948 - மறைவு: 29 பெப்ரவரி 2024
கடந்த மாதம் 29-02-2024 அன்று இறைவனடி சேர்ந்த எங்கள் குலவிளக்கு அமரா் ரேணுகாதேவி சரவணசிவா அவர்களது அந்தியேட்டிக் கிரியைகள் 29-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை 4.30 மணியளவில் முகத்துவாரத்தில் நடைபெற்று, வீட்டு கிருத்திய கிரியைகள் அன்னாரது மகளது இல்லத்தில் முற்பகல் 10.00 மணியளவில நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 30-03-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் சரஸ்வதி மண்டபம் பம்பலபிட்டியில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் பங்கு கொண்டு நடைபெறும் மதிய போசண நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
