1ம் ஆண்டு. நினைவஞ்சலி
அமரர் சதாசிவம் லோகேஸ்வரன்
(சட்டத்தரணி, நொத்தாரிஸ், ஜே. பி, யூ. எம், முன்னாள் தலைவர்- யாழ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை)
தோற்றம்: 11 அக்டோபர் 1938 - மறைவு: 05 ஜூலை 2020
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் லோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாகவும்
இருந்த எங்கள் ஐயாவே!
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.
இனி இன்பத்தில் இன் முகம் காட்டவும்
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இவ்வுலகில் நாம் வாழ்ந்திட இறைவனாய்
இருந்து எம்முடன் துணை நிற்க வேண்டுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
