3ம் ஆண்டு நினைவஞ்சலி. நினைவஞ்சலி
அமரர் சதாசிவம் சச்சிதானந்தசிவம் (Kili)
தோற்றம்: 01 ஜனவரி 1949 - மறைவு: 29 ஆகஸ்ட் 2019
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் சச்சிதானந்தசிவம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-08-2022
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
மூன்றாண்டல்ல... மூவாயிரம்
ஆண்டுகள் கடந்தாலும் - எம்
இதயத்தை விட்டகலாத
உன் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்திக்காக என்றும்
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
