நன்றி நவிலல் நினைவஞ்சலி

அமரர் செல்லையா புண்ணியமூர்த்தி

(சட்டத்தரணி, சமாதான நீதவான், வவுனியா மாவட்ட உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற பதில் நீதிபதி)

செல்லையா புண்ணியமூர்த்தி

தோற்றம்: 19 ஆகஸ்ட் 1928 - மறைவு: 06 ஆகஸ்ட் 2021

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு

ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா

புண்ணியமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.

ஒரு முறைதான் இப்பிறவி

போனால் வாராது என்று தெரிந்தும்
போகும் வழி எல்லாம் 
எம் மனம் உங்களைத் தேடுகின்றதே!

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே !

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை ஏங்கி
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
 
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
இங்ஙனம்,
 
குடும்பத்தினர்

www.tamilthakaval.org