1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிதம்பரநாதர் கனகசிங்கம்
தோற்றம்: 08 நவம்பர் 1959 - மறைவு: 30 ஆகஸ்ட் 2021
யாழ். மாசார் பளை முருகந்தநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதர் கனகசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவலைகள்
எங்களின் இதய தெய்வமே
ஓராண்டுகள் சென்றாலும் உம்
நினைவுகள் எம்மை விட்டு
நீங்கவில்லை என்றும் எங்களுடன்
இதயத்தில் வாழ்கின்றீர்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால் வாழும்
தெய்வமாகி ஒளியாகி
எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
