2ம் ஆண்டு நினைவஞ்சலி

2ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி.சிதம்பரம் யோகநாதன்

திருமதி.சிதம்பரம் யோகநாதன்

தோற்றம்: 05 ஜனவரி 1947 - மறைவு: 27 அக்டோபர் 2017

 2ம் ஆண்டு நினைவஞ்சலி 


திருமதி.சிதம்பரம் யோகநாதன் 

(சோதி அக்கா-முன்னால் சித்த ஆயுள்வேத மருத்துவர்,நயினாதீவு) 

அம்மா! 

 


இரண்டு ஆண்டுகள் ஆகினதே 

நீ என்னை விட்டு சென்று போனாயே 

உனக்காகவே என்று நான் வாழ்ந்தேனே 

நீ எங்கே சென்றாய் என் தாயே! 


உன்னை சுத்தி என் வாழ்வை அமைத்தேனே 

என்னை பாக்காமல் நீ இருக்கமாட்டாயே 

தினமும் நான் உன்னிடம் ஓடி வந்தேனே 

என் சிந்தனைகள் முழுவதும் நீ தானே! 

 
இதயம் உன்னை தினமும் தேடுதே 

அம்மா அம்மா எண்டு தாளம் போடுதே 

உன் ஆசை குரலின் ஓசையை ஏங்குதே 

என் இதய கோவிலின் காவிய நாயகியே! 


என் விழிகள் உன்னை தேடி சோந்ததே 

உன் பொன் முகம் என் முகம் ஆகியதே 

நீ என் முன் இல்லை என்றாலும் 

அம்மா நீ வாழ்ந்து சென்ற வாழ்க்கை என்  பாதையே! 


கல்வியின் பலத்தை ஊட்டியவளே 

உன் ஆர்வம் மேடை ஏத்தினதே 

உன் விழிகளின் ஒளி நட்ச்சத்திரம் போல் மின்னியதே 

நான் தினமும் பெருமை உனக்கு தரும்போதே 

என் வெற்றிகளின் பக்கபலமே! 


அம்மா அம்மா நீ என்கே அம்மா 

பிள்ளை நான் உன்னை தேடுகிறேன் அம்மா 

ஆண்டுகள் சென்றாலும் புகழுவேன் உன்னை அம்மா! 


என் தாயை போல யாரும் இல்லையே 

உன் ஆசை குரலின் ஓசை வேணுமே 

பத்து மாசம் சுமந்து வந்தவளே 

கட்டி அணைத்து வளர்த்தவளே 

நீ இல்லாமல் நான் யார் அம்மா 

தாயே அன் தெய்வமே! 

 
அம்மாவின் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல 

ஸ்ரீ நாகபூசணி அம்பாளை பிரார்த்திக்கின்றோம். 

தகவல்-பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் 

தொடர்புகளுக்கு:- 

பிரகாஷ்,பிரதீபன்,சிவதர்சினி:-+1 416 560 1739 

மருமக்கள்:-அபிமன்யு,ராஜூ,ரதீஷா 

பேரப்பிள்ளைகள்:-வாகை தென்றல்,ஈகன் இனியன்,ஏகன் அன்பன் 

திருமதி.சிதம்பரம் யோகநாதன் 

2ம் ஆண்டு நினைவஞ்சலி 

பிறப்பு:-05-0101947     இறப்பு:-27-10-2017 

www.tamilthakaval.org