31ம் நாள் நினைவஞ்சலி
அமரர் சிவசுப்ரமணியம் சறோஜினிதேவி
தோற்றம்: 28 ஜூலை 1950 - மறைவு: 21 ஜூலை 2022
யாழ். காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்ரமணியம் சறோஜினிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
காரைநகர் களபூமி தந்த எங்கள் தங்க அம்மா!
பாசமாய் நீங்கள் காட்டிய வழி இன்று வரை ஞானமாய் இருக்கிறது
அன்போடு கரிசனையாய் கண்டித்து வளர்த்த
பண்பு இப்போது தாம் எமக்கு காவியமாய் புரிகிறது.
அப்பாவின் ஆத்மா சாந்தி பெற அனுதினமும் நினைத்தீர்களே?
அதனால் தான் என்ன்வோ ஆறே மாததில்
அவர் அருகே சென்றீர்களோ! அம்மா.
இறுதிகாலத்திலும் எமக்கு வாழ்க்கை
பாடத்தை கற்பித்தீர்களே! அம்மா
எங்களை வழிநடத்திய உங்களை
இழந்து தவிக்கின்றோம் இன்று...
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்!.....
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றர் உறவினர்
www.tamilthakaval.org
