2ம் ஆண்டு நினைவஞ்சலி
late தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்)
தோற்றம்: 09 பெப்ரவரி 1955 - மறைவு: 02 பெப்ரவரி 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா அவர்களின் 2ம் ஆண்டு
நினைவஞ்சலி.
இல்லறத்தில் நீர் இணைந்த இனி நாளை நாங்கள் கூடி
நல்லறத்தின் மாண்புகளை நினைத்து ஒன்றாய் மகிழும் வேளை
இறையடியை சேர்ந்த நாளாய் நினைக்க வைத்து சென்றனையோ
பிறை தரித்த சிவன் செயலை யார் அறிவார்
சாதல் புதுவதன்று என்றான் பழம்புலவன் நாம் கொண்ட
காதல் உலக நியதியினை ஏற்க மறுக்குதையா
பயண நடுவினிலே எமை விட்டு நீ போனாய்- நிலை
நயன உறக்கமதை எம் மனசு ஏற்குதில்லை
தியாக வாழ்வினையும் துணைபிள்ளை மீதான அன்பினையும்
தூய மனதினையும் சூழ்ந்திருந்தோர் மீதான பிணைப்பினையும்
முடிவிலியாய் நாம் நினைத்து எம் மனத்தை ஆற்ற
முடியாது கதறுகின்றோம் சிவன் கழலை நீ அடைவாய் போற்றி
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
