3 வது வருடம் நினைவஞ்சலி
அமரர். தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்)
தோற்றம்: 09 பெப்ரவரி 1955 - மறைவு: 04 பெப்ரவரி 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா அவர்களின் 3ம் ஆண்டு
நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
எம் இதயத்து திருவிளக்கே
மூன்று ஆண்டுகள் கடக்கின்றது
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடுபோல்
விலகாமல் என்றென்றும் உள்ளதே!
காலமெல்லாம் கண்ணீரில்
மிதக்க விட்டு மறந்து போனதேனோ?
நீங்கள் பிறந்ததும், எம்மோடு வளர்ந்ததும்
கனவாகிப் போனதே
வாழ்ந்தவையாவும் நினைவாகி
நீங்கள் மறைந்தது மட்டும்
கனவாக இருக்கக் கூடாதா?
என்று உன்னையே எண்ணித் தவிக்கின்றோம்!
என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
உம்மை நினைவு கூறும்
குடும்பத்தினர்.
தகவல்:- மனைவி மற்றும் பிள்ளைகள்
www.tamilthakaval.org
